Tuesday 7th of May 2024 11:31:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் ஒருநாளில் மிக அதிகளவாக  இன்று 887 பேருக்கு கொரோனா; இரு மரணங்கள்!

இலங்கையில் ஒருநாளில் மிக அதிகளவாக இன்று 887 பேருக்கு கொரோனா; இரு மரணங்கள்!


இலங்கையில் நாட்டில் ஒரு நாள் மிக அதிகமாக இன்று 887 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இரு கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.

நாட்டில் கடந்த டிசெம்பர்-03 ஆம் திகதி 878 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவானதே ஒரு நாளில் பதிவான அதிகளவு தொற்று நோயாளர் தொகையாக இருந்த நிலையில் இன்று இதனையும் முறியடித்து ஒரு நாள் மிக அதிகளவு தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.

இன்று பதிவான 878 தொற்று நோயாளர்களுடன் நாட்டில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 56,076 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பதிவான இரு மரணங்களுடன் மொத்த இறப்பு எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது.

பேலியகொடையைச் சேர்ந்த 71 வயதான பெண், அத்துருகிரிய பகுதியைச் சோ்ந்த 46 வயதான ஆண் ஆகியோரே கொரோனாவால் மரணமடைந்தவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE